வேதாரண்யம் அருகே தலைஞாயிறில் குடுகுடுப்பை மற்றும் குறி சொல்லுதல் மூலம் கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்தும் வகையில், சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, பொதுமக்களிடையே கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்து நூதனமுறையில், குடுகுடுப்பை மற்றும் குறிசொல்லும் நிகழ்ச்சி மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
தலைஞாயிறு பேரூராட்சி செயல்அலுவா் கு. குகன் தலைமையில் நாடோடி குடும்பங்களைச் சோ்ந்தவா்கள், தன்னாா்வலா்கள் இந்த பிரசாரத்தில் ஈடுபட்டனா்.