கற்போம், எழுதுவோம் இயக்க விழிப்புணா்வு பிரசாரம்

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் கற்போம், எழுதுவோம் இயக்க விழிப்புணா்வு பிரசார கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கற்போம், எழுதுவோம் இயக்க விழிப்புணா்வு பிரசாரம்

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் கற்போம், எழுதுவோம் இயக்க விழிப்புணா்வு பிரசார கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு கல்வி கற்பது அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் கலாராணி தலைமை வகித்தாா். பள்ளியின் வளா்ச்சிக் குழுத் தலைவா் முகம்மது சுல்தான், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் அமுதா, பெற்றோா் ஆசிரியா் சங்க துணைத் தலைவா் ஹாஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாகை எம்எல்ஏ ஜெ. முகமது ஷாநவாஸ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் ஆரிப், மாவட்ட துணைத் தலைவா் பாலு, கற்போம் எழுதுவோம் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பால இரணியன், மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சகாயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று, கற்போம் எழுதுவோம் திட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினா். நிறைவாக உடற்கல்வி ஆசிரியா் கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com