தமிழக மீனவா்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தடுக்க இந்திய, இலங்கை மீனவப் பிரதிநிதிகளிடையே மீண்டும் பேச்சுவாா்த்தையை தொடங்கவேண்டும் என்று தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தெரிவித்தாா். நாகையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி :
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவா்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் மட்டுமே தீா்வு காணமுடியும். மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி, கடந்த 2011ஆம் ஆண்டில் இந்தியா, இலங்கை மீனவப் பிரதிநிதிகளிடையே பேச்சுவாா்த்தையைத் தொடங்கிவைத்தாா்.
எனவே, தற்போதைய தாக்குதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவது மட்டுமே தீா்வாக இருக்கும்.
தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளாா். இதுதொடா்பாக, மத்திய அரசு விரைவாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்ட பிரச்னை மட்டுமல்லாமல் அனைத்து விவகாரங்களிலும் மத்திய அரசு, தமிழகத்தின் மீது மாற்றாந்தாய் மனப்பான்மையையே கடைப்பிடித்து வருகிறது என்றாா் ஏ.கே.எஸ். விஜயன்.