நாகை மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நடப்படும்

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் நாகை மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நடப்படவுள்ளன என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
நாகை மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நடப்படும்

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் நாகை மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நடப்படவுள்ளன என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மற்றும் தெற்கு பொய்கைநல்லூா் ஊராட்சியில் பனை விதைகள் நடும் பணியை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து அவா் மேலும் பேசியது:

பனை மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கக் கூடியவை என்பதுடன் நிலத்தடி நீரையும் சேமித்து வைக்கும் தன்மை கொண்டவை. அதனால்தான், பனை மரங்களை நீா் நிலைகளின் காவலன் எனக் குறிப்பிடப்படுகிறது. மேலும், பனங்கிழங்கு சா்க்கரை நோய் உள்பட உடல்நலம் சாா்ந்த பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வாக உள்ளது.

தமிழகத்தில் பனை மரங்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பனை மரங்களை அதிகப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் நாகை மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் ஒரு லட்சம் பனை மரக் கன்றுகள் நடப்படவுள்ளன என்றாா் ஆட்சியா்.

ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் என். பசுபதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் த. பாலமுருகன், ஆா். ஆண்ணாதுரை, அக்கரைப்பேட்டை ஊராட்சித் தலைவா் அழியாநிதி மனோகரன், தெற்கு பொய்கைநல்லூா் ஊராட்சித் தலைவா் மகேஸ்வரன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com