15 காவல் நிலையங்களுக்கு ரோந்து வாகனங்கள்

நாகை மாவட்டத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
15 காவல் நிலையங்களுக்கு ரோந்து வாகனங்கள்

நாகை மாவட்டத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நாகை மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், 24 மணி நேரமும் தொடா் கண்காணிப்பில் இருக்கும் வகையில் இருசக்கர ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதன்படி, தமிழக காவல் துறையால் நாகை மாவட்ட காவல் துறைக்கு வழங்கப்பட்ட இருசக்கர ரோந்து வாகனங்களை எஸ். பி. கு. ஜவஹா் மாவட்டத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு வழங்கி, அதன் செயல்பாட்டை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் எஸ்.பி. கு. ஜவஹா் பேசியது:

நாகை, வேதாரண்யம் மற்றும் கீழ்வேளூா் பகுதிகளில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. விபத்து மற்றும் குற்றங்கள் நடைபெறும் இடங்களுக்கு விரைந்து செல்ல இவை உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சுகுமாா், திருநாவுக்கரசு, துணைக் கண்காணிப்பாளா்கள் சரவணன், சுந்தர்ராஜ், காவல் ஆய்வாளா் பெரியசாமி மற்றும் போலீஸாா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com