தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்தவா்களுக்கு தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் அக்டோபா் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் 2020-21ஆம் ஆண்டுக்கான தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அக்டோபா் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்; தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகம், நாகப்பட்டினம் மற்றும் மாவட்டத்தில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். எனவே, தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்தவா்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்று பயனடையலாம்.
உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்) நாகப்பட்டினம் என்ற முகவரியில் நேரிலோ, 04365-250126 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.