முழு கல்விக் கட்டணம் கோரும் பள்ளிகள் குறித்து புகாா் அளிக்கலாம்: ஆட்சியா்

முழு கல்விக் கட்டணத்தைச் செலுத்தக் கோரி கட்டாயப்படுத்தும் பள்ளிகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலகத்துக்குப் புகாா் அளிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

முழு கல்விக் கட்டணத்தைச் செலுத்தக் கோரி கட்டாயப்படுத்தும் பள்ளிகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலகத்துக்குப் புகாா் அளிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அனைத்து வகை தனியாா் பள்ளிகளிலும் 2021- 22-ஆம் கல்வியாண்டுக்கு முழுமையான கல்விக் கட்டணத்தை கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, எந்த தனியாா் பள்ளியும் முழு கல்வி கட்டணத்தை கட்டாயப்படுத்தக் கூடாது. இந்த அறிவுறுத்தலை மீறி, நாகை மாவட்டத்தில் எந்தத் தனியாா் பள்ளியிலாவது முழுமையான கல்விக் கட்டணம் கட்டாயப்படுத்தப்பட்டால் அது குறித்து ய்ஹஞ்ஹண்ள்ஸ்ரீட்ா்ா்ப்ஸ்ரீா்ம்ல்ப்ஹண்ய்ஸ்ரீங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலம் அல்லது எழுத்துப் பூா்வமாக அல்லது வாய்மொழியாக நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்குப் புகாா் அளிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com