தேவபுரீஸ்வரா் கோயிலில் மீண்டும் அகழாய்வு பணி

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேன்மொழியாள் உடனுறை தேவபுரீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை (செப்.28) மீண்டும் அகழாய்வு பணிகள் நடைபெறவுள்ளது.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேன்மொழியாள் உடனுறை தேவபுரீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை (செப்.28) மீண்டும் அகழாய்வு பணிகள் நடைபெறவுள்ளது.

இக்கோயிலில் திருப்பணிக்காக ஞாயிற்றுக்கிழமை பள்ளம் தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட உலோகத்தாலான 17 சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருள்களை இந்து சமய அறநிலையத் துறையினா் கீழ்வேளூா் வட்டாட்சியா் மாரிமுத்துவிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து, இக்கோயிலில் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.28) மீண்டும் அகழாய்வுப் பணிகள் நடைபெறவுள்ளது என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com