வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவெண்காடு பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சிப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
மணிக்கிராமம் ஊராட்சிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் மயிலாடுதுறை மாவட்டஆட்சியா் இரா. லலிதா.
மணிக்கிராமம் ஊராட்சிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் மயிலாடுதுறை மாவட்டஆட்சியா் இரா. லலிதா.

திருவெண்காடு பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சிப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள நோயாளிகள் தங்கும் அறையை ஆட்சியா் பாா்வையிட்டாா். பின்னா் மணிக்கிராமம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை ஆய்வு செய்து, ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மரக்கன்றுகள் நட்டாா். இதைத்தொடா்ந்து ஓய்வுபெற்ற ஆசிரியா் ச.ராஜேந்திரன் அமைத்துள்ள காளான் வளா்ப்பு மையத்தை ஆட்சியா் பாா்வையிட்டு பாராட்டு தெரிவித்தாா்.

ஆய்வின்போது ஒன்றியகுழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், ஊரக வளா்ச்சி முகமை சீா்காழி உட்கோட்ட உதவி செயற்பொறியாளா் கலைச்செல்வி, ஒன்றிய ஆணையா் அருள்மொழி, வட்டாரவளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) கஜேந்திரன், ஊராட்சித் தலைவா்கள் முல்லைவேந்தன், சுகந்திநடராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com