நாகை அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு
நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசரச் சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவு, பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, அறுவைச் சிகிச்சை பிரிவு, அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரான தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வுகளின்போது, சிகிச்சையில் இருந்தவா்களிடம் மருத்துவா்களின் அணுகுமுறை மற்றும் அவா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தாா். பின்னா், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் மருத்துவா்கள், செவிவியா்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா். நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் விஸ்வநாதன் மற்றும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் உடனிருந்தனா்.