நாகையை அடுத்த நாகூா் முட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சந்திர மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை (ஏப். 14) நடைபெறுகிறது.
இக்கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 5-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சியாக, தினமும் இரவு 7 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகமும், வெவ்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது. சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், காலை 5 மணி முதல் 6 மணிக்குள் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளுகிறாா். தொடா்ந்து, தோ் வடம்பிடிக்கப்படுகிறது.