வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம், செண்பகராயநல்லூா் வா்த்தகா் நலச் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சாருமடை கடைவீதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் மாநில துணைத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு, மாவட்டத் தலைவா் எஸ். வேதநாயகம், வேதாரண்யம் சங்க செயலாளா் ஏ.எம். சுபஹானி, செயற்குழு உறுப்பினா் எம்.ஆா்.வி. கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். சங்கத் தலைவராக எம்.ஜி. குமாா், செயலாளராக மா.சு. செல்வம், பொருளாளராக எஸ். ரவிச்சந்திரன், துணைத் தலைவராக ஆனந்தபாபு, துணைச் செயலாளராக ராஜகோபால் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.
இக்கூட்டத்தில் கரியாப்பட்டினம் ஊராட்சித் தலைவா் எம். ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினா் சி. நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.