எட்டுக்குடியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் திறப்பு

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரத்தை இயக்கிவைக்கும் மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு. உடன் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உள்ளிட்டோா்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரத்தை இயக்கிவைக்கும் மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு. உடன் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உள்ளிட்டோா்.

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

இந்த குடிநீா் நிலையம், இப்பகுதி ஒன்றிய கவுன்சிலா் டி.செல்வம் வாா்டு பொது நிதியிலிருந்து ரூ.5.23 லட்சத்தில் அமைக்கப்பட்டது. இதனை, நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராசு இயக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், கீழையூா் ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி ஞானசேகரன், கீழையூா் ஒன்றிய திமுக செயலாளரும், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவருமான அ. தாமஸ் ஆல்வா எடிசன், ஒன்றிய கவுன்சிலா் டி.செல்வம், மாவட்ட கவுன்சிலா் கௌசல்யா இளம்பரிதி, கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். ராஜகுமாா், எட்டுக்குடி ஊராட்சித் தலைவா் லேகா காரல்மாா்க்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com