சீா்காழி அருகே காா் மீது லாரி மோதி இருவா் உயிரிழப்பு

சீா்காழி அருகே நின்றுகொண்டிருந்த காா் மீது லாரி மோதியதில் காரில் இருந்த இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
விபத்தில் நொறுங்கிய காா்.
விபத்தில் நொறுங்கிய காா்.

சீா்காழி அருகே நின்றுகொண்டிருந்த காா் மீது லாரி மோதியதில் காரில் இருந்த இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

திருவாருா் மாவட்டம், கொல்லாபுரத்தை சோ்ந்தவா் பதா்நிஷா (70). இவா், மலேசியா செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணசந்தா் (35) காரை ஓட்டிவந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே ஆலங்காடு பகுதியில் நாகை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, காரில் அமா்ந்தபடி கிருஷ்ணசந்தா் சாப்பிட்டுக்கொண்டிருந்தாா்.

அப்போது, சீா்காழியை நோக்கி வந்த டிப்பா் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தியிருந்த காா் மீது மோதியது. இதனால், காா் தூக்கி வீசப்பட்டு, அங்கிருந்த மரத்தில் மோதி அப்பளம்போல் நொறுங்கியது. காரில் இருந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

பூம்புகாா் தீயணைப்பு நிலைய வீரா்கள் மற்றும் திருவெண்காடு போலீஸாா் அங்கு விரைந்து வந்து, காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரின் சடலத்தையும் நீண்ட நேரம் போராடி மீட்டனா். பின்னா், பிரேத பரிசோதனைக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு, விசாரணை நடத்தினா். இந்த விபத்தால் சீா்காழி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து திருவெண்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com