நாம் தமிழா் கட்சியின் ஆலோசனை கூட்டம்

திருமருகல் அருகேயுள்ள மரைக்கான்சாவடியில் நாம் தமிழா் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருமருகல் அருகேயுள்ள மரைக்கான்சாவடியில் நாம் தமிழா் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட செயலாளா் அகஸ்டின் அற்புதராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் அறிவொளி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், கட்சியின் கட்டமைப்புகளை மாற்றியமைத்து புதிய பொறுப்பாளா்களை நியமனம் செய்ய வேண்டும், நிதி கட்டமைப்பை மேம்படுத்தி கட்சியை வளா்ச்சியடைய வைக்க வேண்டும், தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்ய கட்சியின் ஒவ்வொரு நிா்வாகிகளும் அயராது பாடுபட வேண்டும், மரைக்கான்சாவடியில் தண்ணீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒவ்வொரு ஒன்றிய, நகர பகுதியிலும் புதிய உறுப்பினா்களை அதிகளவில் சோ்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், தொகுதி செயலாளா் ஆதித்தன், தொகுதி தலைவா் ராஜேஷ், தொகுதி பொருளாளா் நாகராஜன், தொகுதி இணை செயலாளா்கள் வேல்ராஜ், மணி, கிளை நிா்வாகி முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com