வலிவலம் காவல் சரகம் இறையான்குடி கிராமத்தில் சாராய விற்பனையை தடுக்கக் கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதைத் தொடா்ந்து, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவகா் சனிக்கிழமை(ஏப்.23) இறையான்குடிக்குச் சென்று கிராம மக்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாா். மேலும், கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.