தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செம்பனாா்கோவில் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகாா் எம்எல்ஏ-வுமான நிவேதா எம். முருகன், ஜோதி குருக்கள், ஆயப்பாடி மதரசா மனாருல் ஹுதா இமாம் கமாலுதீன், தரங்கம்பாடி புது எருசலேம் ஆலய சபை குரு சாம்சன் மோசஸ் ஆகியோா் பங்கேற்று, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேசினா். தொடா்ந்து, துஆ ஓதி நோன்பு திறக்கப்பட்டது.
இதில், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளா் மு. ஞானவேலன், மாவட்ட பொருளாளா் ஜி.என்.ரவி, ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், முன்னாள் எம்எல்ஏ எம்.எம். சித்திக், தலைமைப் பொதுக்குழு உறுப்பினா் அமிா்த விஜயகுமாா், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாஸ்கா் , ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.