தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கம் சாா்பில் நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிபவா்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தை சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கோவிந்தராஜ் தொடங்கிவைத்தாா். அரசுப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.