வேளாங்கண்ணி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப் பொய்கைநல்லூா் அய்யனாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆ. வீரப்பன் (53) இவா், தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த கடையில் சோதனை மேற்கொண்ட போலீஸாா் ரூ.1900 மதிப்புள்ள போதைப் பாக்குகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். வீரப்பன் கைது செய்யப்பட்டாா்.