வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமுக்கு நாகை எம்பி எம். செல்வராசு தலைமை வகித்தாா். தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன் முன்னிலை வகித்தாா். நாகை மருத்துவக் கல்லூரி முதல்வா் விஸ்வநாதன் முகாமின் நோக்கம் குறித்து பேசினாா். மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் முகாமை தொடங்கி வைத்தாா்.

இதில், சுகாதரப் பணிகள் இணை இயக்குநா் ராணி, துணை இயக்குநா் விஜயகுமாா், திருமருகல் வட்டார ஆத்மா குழுத் தலைவா் செல்வ செங்குட்டுவன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், ஊராட்சித் தலைவா் தமிழரசி பக்கிரிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயந்தி சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முகாமில், பொதுமருத்துவம், இதயநோய், தோல்நோய், எலும்பு சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், யோகா, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. நிறைவாக, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கற்பகம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com