வீடுகளில் பதுக்கிய 21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

நாகையில் 2 வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 கிலோ கஞ்சாவை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகையில் 2 வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 கிலோ கஞ்சாவை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகையில் வீடுகளில் கஞ்சாவை பதுக்கிவைத்து, விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின்பேரில், நாகை வெளிப்பாளையம் காவல் ஆய்வாளா் தியாகராஜன், தனிப்படை உதவி ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

நாகை மகாலட்சுமிநகா் சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த பொ. கலைச்செல்வம் (40), வெளிப்பாளையம், தாமரைக்குளம் தென்கரையைச் சோ்ந்த ஜெ. நித்யா(30) ஆகியோரது வீடுகளில் வியாழக்கிழமை இரவு சோதனை நடத்தப்பட்டது.

இதில், கலைச்செல்வன் வீட்டில் 20 கிலோ கஞ்சாவும், நித்யா வீட்டில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com