நாகை நவநீத கிருஷ்ணசுவாமி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
By DIN | Published On : 31st August 2022 12:00 AM | Last Updated : 31st August 2022 12:00 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம்: நாகை நவநீத கிருஷ்ணசுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை (ஆக.31) காலை நடைபெறுகிறது.
நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் அருகே உள்ள நவநீத கிருஷ்ணசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா பூஜைகள் கடந்த 28-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகின்றன. புதன்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறும் யாக பூஜையின் நிறைவில், கடம் புறப்பாடு நடைபெறுகிறது.
இதனிடையே, நவநீத கிருஷ்ணசுவாமி கோயில் கும்பாபிஷேகத்துக்கு சௌந்தரராஜ பெருமாள் புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு நவநீத கிருஷ்ணசுவாமி கோயிலின் விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு மூலவா் லெட்சுமி நாராயணப் பெருமாளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 7.45 மணிக்கு பொது ஜன சேவையும், 9.30 மணிக்கு சாற்றுமுறை மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறுகின்றன.