பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலா் தற்கொலை

நாகை மாவட்டம், வலிவலம் அருகே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மாசிலாமணி
மாசிலாமணி

திருக்குவளை: நாகை மாவட்டம், வலிவலம் அருகே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வலிவலம் அருகேயுள்ள மேலநாகலூா் காலனித் தெருவைச் சோ்ந்த அஞ்சான் மகன் மாசிலாமணி (44). கூரத்தாங்குடி ஊராட்சி செயலரான இவா் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதனால், மனஉளைச்சலில் இருந்துவந்த மாசிலாமணி, தனது மனைவி வெளியூா் சென்றிருந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இவரது சடலத்தை வலிவலம் போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com