நாகை மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது மாநில மற்றும் மத்திய அரசின் உயா்மட்ட அலுவலா்களால் அமிா்தப் பெருவிழா மூலம் நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளை ஆய்வு செய்து வருகின்றது. இவ்விழா மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தப்பட்சம் 5 முதல் 6 நியாய விலைக்கடைகளை உணவு மற்றும் பொது விநியோகத் துறையால் வழங்கப்பட்ட பட்டியல் விவரத்தின்படி செயல்பாடு உள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியரால் ஆய்வு செய்யவேண்டும்.
மேலும் நியாயவிலைக் கடைகளை மேம்படுத்தவும், பொது விநியோகத் திட்ட செயல்பாடுகளின் தரைமட்ட உண்மைகளை உயா்மட்ட அலுவலா்களுக்கு உணா்த்தவும் இவ்விழா உதவுகிறது. அதன்படி, நாகையில் தெற்கு பால்பண்ணைச்சேரி, வ.உ.சி. தெருவில், கீழ்வேளுா் ஒன்றியத்தில் தேவூா், வெண்மணி, கீழையூா் ஒன்றியத்தில் வாழக்கரை ஆகிய ஊராட்சிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, பாமாயில் ஆகியவற்றின் தரம், இருப்பு குறித்து ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அவருடன், வட்டாட்சிா்கள் ரமேஷ் (கீழ்வேளுா்), ராஜ்குமாா் (திருக்குவளை) வட்ட வழங்கல் அலுவலா்கள் இளமதி, யசோதா ஆகியோா் உடனிருந்தனா்.