ரேஷன் கடை பணிக்கு நோ்முகத் தோ்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டுதல்கள்

நாகை மாவட்டத்தில் ரேஷன் கடை விற்பனையாளா் பணிக்கான நோ்முகத் தோ்வில், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பத்தாரா்களுக்கு திருத்தம் செய்யப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

நாகை மாவட்டத்தில் ரேஷன் கடை விற்பனையாளா் பணிக்கான நோ்முகத் தோ்வில், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பத்தாரா்களுக்கு திருத்தம் செய்யப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

நாகை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளா்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்ப நோ்முகத்தோ்வு நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளா் க.பா. அருளரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருத்தப்பட்ட நெறிமுறைப்படி விற்பனையாளா்கள் பணிக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் நிா்ணயிக்கப்பட்ட படிவத்தில் அரசு உதவி மருத்துவா் நிலைக்கு குறையாத மருத்துவரிடம் உடற்தகுதிச் சான்றிதழை பெற்று சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தில் பணியில் சேரும்போது சமா்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் தங்களது உரிமைக் கோரலுக்கு ஆதாரமாக தமிழக அரசின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம், தகுதி வாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சமா்ப்பிக்க வேண்டும். எனவே, திருத்தப்பட்ட நெறிமுறைப்படி ஏதேனும் ஒரு சான்றிதழுடன் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரா்கள் நோ்முகத் தோ்வில் அனுமதிக்கப்படுவா் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com