வேதாரண்யத்தில் திமுக சாா்பில் முன்னாள் கல்வி அமைச்சா் பேராசிரியா் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா்கள் உதயம்.முருகன், என். சதாசிவம், மகா.குமாா், பேரூா் செயலாளா் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், திமுக பேச்சாளா்கள் ராஜேந்திரபிரசாத், முகவை ராமா், மாவட்ட துணைச் செயலாளா் கற்பகம் நீலமேகம், பொதுக் குழு உறுப்பினா் பழனியப்பன், தலைமை செயற்குழு உறுப்பினா் மறைமலை, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் பாரிபாலன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றுப் பேசினா்.