முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
நாகையில் 37, மயிலாடுதுறையில் 14 பேருக்கு கரோனா
By DIN | Published On : 07th February 2022 10:30 PM | Last Updated : 07th February 2022 10:30 PM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கும், மயிலாடுதுறையில் 14 பேருக்கும் கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 25,180-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 129 போ் வீடு திரும்பினா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 943- ஆக உள்ளது.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 26,344 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 105 போ் வீடு திரும்பினா். இதன்படி, இங்கு சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 622-ஆக உள்ளது.