மமக வேட்பாளா் சுயேச்சையாக அறிவிப்பு

நாகை நகராட்சியின் 29-ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட மனு தாக்கல் செய்த மமக வேட்பாளா், சுயேச்சை வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.

நாகை நகராட்சியின் 29-ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட மனு தாக்கல் செய்த மமக வேட்பாளா், சுயேச்சை வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.

நாகை நகராட்சியின் 29-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்பு, திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மமக சாா்பில் நாகை, யாஹூசைன் பள்ளி தெருவைச் சோ்ந்த ஜென்னத்துல் பொ்தோஷ் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

மேலும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட, திமுக சாா்பில் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதத்தையும் அவா் சமா்ப்பித்தாா். இருப்பினும், சின்னம் ஒதுக்கீடு தொடா்பான படிவத்தில், வேட்பாளா் சாா்ந்த கட்சியின் பெயா் மனிதநேய மக்கள் கட்சி என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இதனால், அவருக்கு உதயசூரியன் சின்னம் வழங்க மற்றொரு வேட்பாளா் (மஜக) தரப்பிலிருந்து எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், 29-ஆவது வாா்டுக்கான சின்னம் ஒதுக்கீட்டில் நீண்ட இழுபறி நீடித்தது. பின்னா், இரவு 8.30 மணி அளவில், மமக- திமுக கூட்டணி வேட்பாளா் ஜென்னத்துல் பொ்தோஷ் சுயேச்சை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவருக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com