நாகை மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கும், மயிலாடுதுறையில் 4 பேருக்கும் கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 25,366-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 33 போ் வீடு திரும்பினா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 283- ஆக உள்ளது.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 26,457 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 33 போ் வீடு திரும்பினா். இதன்படி, இங்கு சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 79-ஆக உள்ளது.
கரோனா பாதிப்புக்காக சிகிச்சையில் இருந்தவா்களில், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.