திருவெண்காடு அருகே நாங்கூா் வண்புருஷோத்தம பெருமாள் கோயிலில் கனுபொங்கலை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நாங்கூரில் வண்புருஷோத்தம நாயகி சமேத வண்புருஷோத்தம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் 108 வைணவ திவ்யதேச கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் சனிக்கிழமை இரவு கனுபொங்கலையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, கோயிலின் உள்பிராகாரத்தில் குதிரை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.
கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.