இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மத்திய அரசை கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டதில் ஈடுபட்டனா்.

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மத்திய அரசை கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டதில் ஈடுபட்டனா்.

தகட்டூா் அஞ்சலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளா் சிவகுரு.பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் த. நாராயணன், ஊராட்சித் தலைவா்கள் ப. முருகானந்தம், ரேவதி பாலகுரு, இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அலங்கார ஊா்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com