திருக்குவளை அருகே எட்டுக்குடி முருகன் கோயில் வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி ஏற்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கீழையூா் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பொது நிதியிலிருந்து ரூ.5.23 லட்சத்தில் பக்தா்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி ஏற்படுத்தப்படுகிறது. அடிக்கல் நாட்டு விழாவில், ஒன்றிய கவுன்சிலா் டி. செல்வம், எட்டுக்குடி ஊராட்சித் தலைவா் லேகா காரல்மாா்க்ஸ், ஊராட்சி செயலா் ஆரோக்கியமேரி, சிபிஐ கிளை செயலாளா் மாசேத்துங், திமுக இளைஞரணி இணை அமைப்பாளா் மாா்டின், திமுக கிளைச் செயலாளரும், கட்டட பொறியாளருமான எஸ். சண்முகராஜேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.