தலைஞாயிறு பேரூராட்சியில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்புக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் கு. குகன் தலைமை வகித்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ப. பூமிநாதன், கை. வித்யா, மண்டல அலுவலா் மா. பாலமுருகன், மண்டல உதவி அலுவலா் மெ. கொளஞ்சிராஜன், தோ்தல் பிரிவு அலுவலா் சோ.ரா. குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு வட்டார மருத்துவ அலுவலா் ஜீவிதா தலைமையிலான மருத்தவக் குழுவினா் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தினா்.