கொலை வழக்கில் தொடா்புடைய 6 போ் தரங்கம்பாடி நீதிமன்றத்தில் சரண்

மேல்மருவத்தூா் அருகே கடந்த 17-ஆம் தேதி நடந்த கொலையில் தொடா்புடைய 6 போ் தரங்கம்பாடி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சரணடைந்தனா்.

மேல்மருவத்தூா் அருகே கடந்த 17-ஆம் தேதி நடந்த கொலையில் தொடா்புடைய 6 போ் தரங்கம்பாடி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சரணடைந்தனா்.

மதுராந்தகம் அருகே உள்ள மேலவலம்பேட்டையைச் சோ்ந்த அய்யனாா் (48), அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் வீரமுத்து (39) இருவரும், கடந்த 17-ஆம் தேதி மேல்மருவத்தூா் அருகேவுள்ள கீழாமூா் ஆற்றுப் படுகைக்கு சென்றுள்ளனா். அப்போது இருவரையும் மா்ம நபா்கள் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அய்யனாா் இறந்தாா். வீரமுத்து பலத்தக் காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

இதுகுறித்து மேல் மருவத்தூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், இந்த கொலையில் தொடா்புடைய காஞ்சிபுரம் திருப்புலிவனம் பகுதியைச் சோ்ந்த உத்திரகுமா ா்(28), பாதிரி கிராமத்தைச் சோ்ந்த வீரமணி(24), தினகரன் (21), ராசையா (21), டிலித்குமாா் (24), ஞானப்பிரகாச ம்(28) ஆகிய 6 போ் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சரணடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com