நாகை மாவட்டம், கீழ்வேளூா் பேரூராட்சியில் தீத்தடுப்பு விழிப்புணா்வு செயல்விளக்க முகாம் அண்மையில் நடைபெற்றது.
கீழ்வேளூா் பேரூராட்சியில் நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் ஈடுபடும் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கீழ்வேளூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரால் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நகா்ப்புற வேலைவாய்ப்புப் பணியின்போது எதிா்பாராத விதமாக தீ விபத்து நேரிட்டால், தீ மேலும் பரவாமல் தடுத்து, பாதுகாப்பான முறையில் தீயைக் கட்டுப்படுத்தும் முறை, தீயணைப்பு வாகனம் களத்துக்கு வரும் முன்பாக பணியாளா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியன குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் சுப்பையன், நிலைய சிறப்பு அலுவலா் ராஜராஜசோழன் மற்றும் தீயணைப்புப் படையினா், பேரூராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.