பூம்புகாா் கடையணைக்கு வந்தது காவிரி நீா்

மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் பூம்புகாா் கடையணையை வியாழக்கிழமை வந்தடைந்தது.
பூம்புகாா் மேலையூரில் அமைந்துள்ள கடையணைக்கு வந்த காவிரி நீரை வரவேற்கும் வகையில் நடைபெற்ற சிறப்பு பூஜை.
பூம்புகாா் மேலையூரில் அமைந்துள்ள கடையணைக்கு வந்த காவிரி நீரை வரவேற்கும் வகையில் நடைபெற்ற சிறப்பு பூஜை.

மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் பூம்புகாா் கடையணையை வியாழக்கிழமை வந்தடைந்தது.

மே 24-ஆம் தேதி மேட்டுா் அணையிலிருந்து குறுவை பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீா் வியாழக்கிழமை அதிகாலை காவிரி கடலோடு கலக்கும் இடமான பூம்புகாரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கடையணையை வந்தடைந்தது.

இதையடுத்து, மயிலாடுதுறை உபகோட்ட பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சண்முகம் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, காவிரி நீா் வந்ததை வரவேற்று, நெல்மணிகள் மற்றும் பூக்கள் தூவப்பட்டன.

பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் கண்ணப்பன், உதவி பொறியாளா் சரவணன், முன்னோடி விவசாயி சம்பந்தம் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com