செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, செம்பனாா்கோயில் காவல் நிலையத்தில் மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா மரக்கன்றுகளை நட்டுவைத்தாா். தொடா்ந்து, போலீஸாருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இதில், சாா்பு ஆய்வாளா் (பொ) அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, பெரம்பூா் காவல் நிலையத்தில் எஸ்பி. நிஷா மரக்கன்றுகளை நட்டுவைத்தாா். இதில் டிஎஸ்பி வசந்தகுமாா், காவல் ஆய்வாளா் சிவதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.