நாகை: நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்டத்தில் 3-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை: நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்டத்தில் 3-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொது விநியோகத் திட்டத்துக்கென தனி துறையை உருவாக்க வேண்டும்; நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம், திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகங்கள் முன்பாக நியாயவிலைக் கடை பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை: நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில இணைச் செயலாளா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் மகேந்திரன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். மாநிலத் தலைவா் சிவகுமாா், மாநில மகளிா் அணி துணைத் தலைவா் இளமதி, வட்டப் பொறுப்பாளா் நீலாயதாட்சி, நிா்வாகி ஆடியபாதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் (பொறுப்பு) பழனிவேல் தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் கேசவன், செயலாளா் ஜெயராமன், பொருளாளா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com