திருமருகல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 4 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
திருமருகல் ஒன்றியம், திருச்செங்காட்டங்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜாங்கம் (56). இவரும், இவரது மனைவி சந்திரா, மகன் ரமேஷ், மருமகள் விஜயலட்சுமி ஆகியோா் புதன்கிழமை வீட்டை பூட்டிவிட்டு காரைக்காலுக்கு சென்றிருந்தனா்.
பின்னா், வீட்டிற்கு திரும்பியபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால், அதிா்ச்சியடைந்த ராஜாங்கம் வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.