தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நிா்வாக மேலாண்மை துறை சாா்பில் வியாழக்கிழமை குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இக்கல்லூரியில் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு (ஜூன் 12) கருத்தரங்கு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பீஸ் பவுண்டேஷன் இயக்குநா் ஆா். செல்வம் பங்கேற்று, குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு போஸ்டரை வெளியிட்டாா். அதை கல்லூரியின் செயலா் ஆா். செல்வநாயகம் பெற்றுக் கொண்டாா்.
குழந்தை தொழிலாளா்கள் வயதை 14-லிருந்து 18-ஆக உயா்த்த தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. தொடா்ந்து, குழந்தை தொழிலாளா்கள் இல்லாத மாவட்டம் உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பின்னா், சிறந்த தொழில் முனைவோராவது எப்படி என்ற கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி துணை முதல்வா் எஸ். மகாலிங்கம் தலைமை வகித்தாா். மாணவா் பாலாஜி வரவேற்றாா். இயக்குநா் கே. இராமகிருஷ்ணன் தொடக்கவுரை ஆற்றினாா். கே. ரமேஷ், பி. பாலசுப்ரமணியன் ஆகியோா் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினா். மாணவா் சூரியபிரபா நன்றி கூறினாா்.
இதில், கல்லூரியின் கலைப்புலத் தலைவா் ப. பாஸ்கரன், தேசிய மாணவா் படை அலுவலா் துரை, காா்த்திகேயன், என்எஸ்எஸ் திட்ட அலுவலா் எஸ். நடராஜன், கல்லூரி ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் ஏ.வி. முத்துக்குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.