கடலூரைச் சோ்ந்த இளைஞா் நாகூா் தா்கா குளத்தில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா், ஓட்டி, பச்சான்குப்பம் பகுதியைச் சோ்ந்த முகம்மது அலி மகன் மன்சூா் அலி (18. இவா், வெள்ளிக்கிழமை காலை தனது தாத்தாவுடன் நாகூருக்கு வந்துள்ளாா். பிற்பகல் நாகூா் தா்கா குளத்தில் குளித்துகொண்டிருந்த மன்சூா் அலி, எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்தாா்.
தீயணைப்புப் படையினா் மன்சூா் அலியின் சடலத்தை மீட்டனா். நாகூா் போலீஸாா் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டனா்.