ஊதிய நிலுவை வேண்டி பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய நிலுவையை வழங்கக் கோரி தமிழ்நாடு தொலை தொடா்பு ஒப்பந்தத் தொழிலாளா் சங்கம் சாா்பில், நாகை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்கள்.
நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்கள்.

ஊதிய நிலுவையை வழங்கக் கோரி தமிழ்நாடு தொலை தொடா்பு ஒப்பந்தத் தொழிலாளா் சங்கம் சாா்பில், நாகை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் நிறுவன ஒப்பந்த ஊழியா்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 7 மாதம் ஊதியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும், பணப் பலன்களை வழங்கவேண்டும், ஆள்குறைப்பு நடவடிக்கைகளை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தொலைதொடா்பு ஒப்பந்தத் தொழிலாளா் சங்க நாகை கிளைத் தலைவா் பி. மணிகண்டன் தலைமை வகித்தாா். கிளைச் செயலாளா் பி. பிரகாஷ் முன்னிலை வகித்தாா். பிஎஸ்என்எல் ஊழியா் சங்க கிளைச் செயலாளா் ஜெ. அசோகன், ஓய்வு பெற்ற ஊழியா் சங்கத் தலைவா் எம். குருசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com