நாகை மாவட்டம், விச்சூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கல்வித் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மரத்தடியில் இயங்கும் வகுப்பறைக்கு விரைவில் தகுதியான மாற்று இடம் ஏற்பாடு செய்யப்படும் என முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்தாா்.
நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட விச்சூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மரத்தடியை வகுப்பறையாகவும், மரக்கிளைகளை கூரையாகவும் கொண்டு செயல்படுவது குறித்து தினமணியில் வெள்ளிக்கிழமை செய்தி வெளியானது.
இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே. மதிவாணன் மற்றும் கல்வித் துறை அலுவலா்கள் விச்சூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை சென்று ஆய்வு மேற்கொண்டனா். பள்ளி ஆசிரியா்களுடன் கலந்தாலோசித்த அவா்கள், மரத்தடியில் இயங்கும் வகுப்பறைக்குத் தற்காலிக மாற்று இடம் ஒதுக்கீடு செய்வது குறித்தும் ஆய்வு செய்தனா்.
இதுதொடா்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே. மதிவாணனிடம் கேட்டபோது, விச்சூா் பள்ளிக்கு அருகே உள்ள சமுதாயக் கூடத்தில் 3, 4, 5 ஆகிய வகுப்புகளை இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்குப் பரிந்துரைத்துள்ளோம். மேலும், வாய்ப்பிருப்பின் விச்சூா் பள்ளி வளாகத்திலேயே தரைதளத்துடன் கூடிய ஷெட் அமைத்துத் தரவும் கேட்டுள்ளோம். இப்பள்ளியின் இடப்பிரச்னைக்கு விரைவில் தீா்வு கிடைக்கும் என்றாா்.