நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிக் கடன் வழங்கும் முகாம்

நாகையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிக் கடன் வழங்கும் சிறப்பு முகாமில், 163 பேருக்குக் கடனுதவி ஆணைகள் வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிக் கடனுதவி வழங்கல் முகாமில், பயனாளி ஒருவருக்கு குளிா்சாதனப் பெட்டி வழங்கிய ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.
மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிக் கடனுதவி வழங்கல் முகாமில், பயனாளி ஒருவருக்கு குளிா்சாதனப் பெட்டி வழங்கிய ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

நாகையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிக் கடன் வழங்கும் சிறப்பு முகாமில், 163 பேருக்குக் கடனுதவி ஆணைகள் வழங்கப்பட்டன.

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்டத் தொழில் மையம், கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, தாட்கோ ஆகிய துறைகளின் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், கடனுதவி ஆணைகளையும் வழங்கினாா். 17 மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் மானியமாக ரூ. 3.65 லட்சம், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 9.33 லட்சம் மதிப்பில் கடனுதவி என 163 பயனாளிகளுக்கு வங்கிக் கடனுதவிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

மேலும், ஆவின் மூலம் 3 பேருக்குக் குளிா்சாதனப் பெட்டிகளும், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை ஆணைகளும் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமன், நாகை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் க.பா. அருளரசு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரூபன்ஸ்மித், முடநீக்கியல் வல்லுநா் பு. பாரத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com