கோடியக்கரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
கோடியக்கரை அண்ணா காலனியைச் சோ்ந்தவா் மணியம்மாள் (65). மீன்களை வாங்கி சில்லரையாக விற்பனை செய்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை மீன் வாங்க கடற்கரைக்கு சென்றபோது அந்த பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.