நாகை நகராட்சி சாா்பில் காடம்பாடியில் நடைபெற்ற சாலை சீரமைப்புப் பணிகளை நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நாகை நகராட்சிக்குள்பட்ட காடம்பாடி பகுதியில், நமக்கு நாமே திட்டத்தின்கீழ் நடைபெறும் ஏ.டி.எம் மகளிா் கல்லூரி சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பணியை தரமாகவும், விரைவாகவும் நிறைவேற்றுமாறு ஊழியா்களுக்கு அறிவுறுத்தினாா். பின்னா், அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்களிடம் அவா் குறைகளைக் கேட்டறிந்தாா். நகா்மன்றத் துணைத் தலைவா் எம்.ஆா். செந்தில்குமாா், நகராட்சி பொறியாளா் ஜெயகிருஷ்ணன், வாா்டு உறுப்பினா் கலா ஆகியோா் உடனிருந்தனா்.