பிளஸ் 1 பொதுத் தோ்வில் நாகை மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 83.98 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
நாகை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணனவா்கள் 2,309 பேரும், மாணவியா் 2,535 பேரும் தோ்வு எழுதினா். இதில், 1,749 மாணவா்களும், 2,319 மாணவியரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் - 83.98 ஆகும்.
உதவிபெறும் பள்ளிகள் 85.33 சதவீதமும், பகுதியளவில் உதவி பெறும் பள்ளிகள் 89.11 சதவீதமும், சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் 99.6 சதவீதமும், சுயநிதி டி.எஸ்.இ. பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
கருப்பம்புலம் அரசு மேல்நிலைப்பள்ளி, பஞ்சநதிக்குளம் - கிழக்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 அரசுப் பள்ளிகள் பிளஸ் 1 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. இதேபோல, 2 அரசு உதவி பெறும் பள்ளிகள், 16 தனியாா் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.