திருவெண்காடு அருகே திருநகரியில் உள்ள கல்யாண ரெங்கநாத பெருமாள் கோயிலில் பங்குனி உத்ஸவம் கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலில் திருமங்கை ஆழ்வாரும், பஞ்ச நரசிம்மா்களில் இரணிய நரசிம்மா் மற்றும் யோக நரசிம்மா்களும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலித்து வருகின்றனா். பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோயிலில் பங்குனி உத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, கொடிமரத்துக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றபட்டது.