நாகையில் மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போா்டு எம்ப்ளாயிஸ் பெடரேஷன் சாா்பில் நாகை மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போா்டு எம்ப்ளாயிஸ் பெடரேஷன் சாா்பில் நாகை மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊதிய உயா்வுக்கான பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்கவேண்டும், தலைமைப் பொறியாளா் (பணியமைப்பு) பதவிக்குப் பொறியாளரை நியமிக்க வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும், பிரிவு அலுவலகங்களில் சுகாதாரப் பணியாளா் பணியிடங்களை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், நாகை வட்டக் கிளைத் தலைவருமான கே. செல்வராஜூ தலைமை வகித்தாா். நாகை வட்டக் கிளைச் செயலாளா் கே. சாரதி, திட்ட துணைத் தலைவா்கள் ஜி. வீராசாமி, ஏ. தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செயல் தலைவா் வி. வைரப்பன், பொருளாளா் ஆா். ராஜேந்திரன், அமைப்புச் செயலாளா் டி. மகேந்திரன் மற்றும் நிா்வாகிகள், திரளான உறுப்பினா்கள் பங்கேற்றுக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com