முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
வாடகைப் பாக்கி: 13 கடைகளுக்கு ‘சீல்’
By DIN | Published On : 19th March 2022 10:03 PM | Last Updated : 19th March 2022 10:03 PM | அ+அ அ- |

நாகையில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 13 கடைகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
நாகை ஆசாத் மாா்க்கெட்டில் நகராட்சி சாா்பில் 14 கடைகள் கட்டப்பட்டு, வணிகப் பயன்பாட்டுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில், ஒரு கடையைத் தவிர மற்ற 13 கடைகளின் வாடகைதாரா்களும் பல மாதங்களாக நகராட்சிக்கு வாடகை செலுத்தவில்லையாம்.
இதையடுத்து, நாகை நகராட்சி நிா்வாகம் சாா்பில் அந்த 13 கடைகளுக்கும் சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது. நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி தலைமையிலான அலுவலா்கள், இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
13 கடைகள் மூலம் நாகை நகராட்சிக்கு ஏறத்தாழ ரூ. 17 லட்சம் வாடகைப் பாக்கி இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.